WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 13, 2016

ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை; மத்திய அரசு.

வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை., அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய பல்கலையை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. இதற்காக ஒரு குழுவை மத்திய அரசு தயாரித்துள்ளது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் ஏதேனும் ஒரு மண்டல நிறுவனத்தை, ஆசிரியர் கல்வி பல்கலையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.