WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 28, 2016

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் அமல்.


மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்., ஆகியவற்றில், நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தேசிய ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வான ஜே.இ.இ., தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படும். அதில், இரண்டாம்
கட்ட தேர்வு மதிப்பெண் படி, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதற்கு, நுழைவுத் தேர்வில், 60 சதவீத மதிப்பெண்ணும், பிளஸ் 2 மொத்த மதிப்பெண்ணில், 40 சதவீதமும் சேர்த்து, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் நடத்தப்பட உள்ள ஜே.இ.இ., தேர்வில், புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, ஐ.ஐ.டி., நிறுவனங்களுக்கான இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜே.இ.இ., தேர்வுக்கு பின் வெளியிடப்படும் தரவரிசை பட்டியலில், பிளஸ் 2 மதிப்பெண்கள் சேர்க்கப்படாது; நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். அதேநேரம், பிளஸ் 2 பொதுத் தேர்வில், 75 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே, நுழைவுத் தேர்வு மதிப்பெண் படி, தரவரிசை பட்டியலில் இடம் பெறுவர். தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், பிளஸ் 2 மதிப்பெண்ணில், 65 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம் இனி, பிளஸ் 2 தேர்வில், 75 சதவீத மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்றவர்கள், நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும், ஐ.ஐ.டி.,யில் சேர முடியாது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.