WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 10, 2016

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு.

ஆதார் இணைப்பு பணிகள், விவர சேகரிப்பு பணிகள் நடப்பதால், விரை வில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் மற்றும் பதி லுரை முடிவில், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, ‘கடந்த 2012-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவித்தீர்கள். அந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.பெஞ்சமின் பேசுகையில், ‘தற் போது மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களின் ஆதார் எண்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 90 லட்சம் மாணவர்களின் விவரங்கள் சேகரிக் கப்பட்டுள்ளன. விரைவில் இவர் களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும்’ என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.