WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 4, 2026

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

 

அம்​பேத்​கரை சாதித் தலை​வ​ராகப் பார்க்​கும் நிலையை மாற்ற, தமிழகத்​தில் 2027-28 கல்வி ஆண்​டிலிருந்து 3 முதல் 10-ம் வகுப்பு வரை அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்​களுக்கு கற்​பிக்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

காரைக்​குடியைச் சேர்ந்​தவர்​கள் ராஜேஷ் என்ற ராஜேஷ்குமார், விஜய் என்ற விஜயகுமார். இவர்​கள் புலிக்​குத்தி பேருந்து நிறுத்​தம் பகு​தி​யில் ஒட்​டப்​பட்​டிருந்த அம்​பேத்​கரின் சுவரொட்​டியைச் சேதப்​படுத்தி அதை வீடியா பதிவு செய்து சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​ட​தாக விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி நிர்​வாகி போலீ​ஸில் புகார் அளித்​தார்.

அதன்​பேரில் இரு​வர் மீதும் சோம​நாத​புரம் போலீ​ஸார் எஸ்​.சி. எஸ்​.டி.வன்​கொடுமைச் சட்​டத்​தில் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்​நிலை​யில் இரு தரப்​பினர் இடையே சமரசம் ஏற்​பட்​டுள்​ள​தால் கீழமை நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை ரத்து செய்​யக்​கோரி இரு​வரும் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுவை நீதிபதி எல்​.விக்​டோரியா கெளரி விசா​ரித்​தார்.

ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, ‘மனு​தா​ரர்​களிடம் அம்​பேத்​கர் குறித்து சரி​யான புரிதல் இல்​லை. இரு​வரும் தலா 101 அம்​பேத்​கர் வாழ்க்கை வரலாற்று நூலை வாங்​கி, அதில் ஒன்றை படிக்க வைத்​துக்​கொண்​டு, மற்ற புத்​தகங்​களை டி.கல்​லுப்​பட்​டி​யில் உள்ள முரு​கப்பா அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் படிக்​கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்​களுக்​கும், மற்ற வகுப்பு மாணவர்​களுக்​கும் வழங்க வேண்​டும்.

இரு​வரும் புத்​தகத்தை முழு​மை​யாகப் படித்து வாய்​மொழித் தேர்​வுக்கு தயா​ராக இருக்க வேண்​டும். மேலும், அடை​யாறு புற்​று​நோய் நிறு​வனத்​துக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்​டும்’ என உத்​தர​விட்​டார்.

அடுத்த விசா​ரணை​யின்​போது, மனு​தா​ரர்​கள் இரு​வரிட​மும் அம்பேத்கரின் வாழ்க்கை மற்​றும் பணி​கள் தொடர்​பாக 30 கேள்வி​கள் கேட்​கப்​பட்​டன. இரு​வரும் திருப்​தி​கர​மாக பதிலளித்​தனர். இதையடுத்து, புகார்​தா​ரரும் வழக்கை முடிக்க சம்​மதம் தெரி​வித்​தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: அம்​பேத்​கரின் வாழ்க்கை மற்​றும் பங்​களிப்​பு​கள் பற்றி இளைஞர்​களுக்கு ஆழமாகக் கற்​பிக்​கப்​பட​வில்​லை. அவரை சாதிக் கண்​ணோட்​டத்​தில் பார்க்​கக் கூடாது.

அவர் முழுதேசத்​துக்​கும் சொந்​த​மானவர். அவரைப் பற்றி மாணவர்​களுக்​குக் கற்​பிக்க வேண்​டும். இந்த வழக்​கில் தலை​மைச் செயலர், பள்ளி கல்​வித்​துறைச் செயலர் ஆகியோர் எதிர்​மனு​தா​ரர்​களாகச் சேர்க்​கப்​படு​கின்​றனர்.

இவர்​கள் மாநிலப் பாடத்​திட்​டத்​தில் மூன்​றாம் வகுப்பு முதல் பத்​தாம் வகுப்பு வரையி​லான சமூக அறி​வியல் பாடத்​தில் இந்​திய அரசி​யலமைப்பு சட்ட வரைவுக் குழு​வின் தலை​வ​ராக அம்​பேத்​கர் ஆற்​றிய பங்​கு, நீதி, சுதந்​திரம், சமத்​து​வம் மற்​றும் சகோ​தரத்​து​வம் ஆகிய அரசி​யலமைப்பு தொலைநோக்​குப் பார்​வைக்கு அவர் ஆற்​றிய பங்​களிப்​பு, சுதந்​திரப் போராட்ட இயக்​கத்​தி​லும் ஜனநாயக தேசத்​தைக் கட்​டமைப்​ப​தி​லும் அவர் ஆற்​றிய பங்​கு, பொருளா​தா​ரம், சட்​டம் மற்​றும் சமூக சிந்​தனை ஆகிய துறை​களில் அவர் ஆற்​றிய கல்​வி​சார் சாதனை​கள் ஆகிய தலைப்​பு​களில் பாடங்​களை கற்​பிக்க வேண்​டும்.

இந்​தப் பாடத் திட்​டத்தை 2027- 2028 கல்​வி​யாண்டு முதல் அமல்​படுத்த அரசு முன்வர வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக தலை​மைச் செயலர், பள்ளி கல்​வித்​துறை செயலர் ஆகியோர் 2027 ஜன.21-ம் தேதி விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். மனு​தா​ரர்​கள் மீதான வழக்கு ரத்து செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறி​யுள்​ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.