கலைப்பிரிவு பாடங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு 2 தடவை நடத்துகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நெட் தேர்வு நடத் தப்பட்ட நிலையில், அடுத்த நெட் தேர்வு வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. கலைப் பிரிவு பாடங்களில் (வரலாறு, புவியியல், சமூகவியல், உளவி யல், பொருளாதாரம், வணிகவியல், அரசியல் அறிவியல், மொழிப் பாடங்கள் போன்றவை) முதுகலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண் ணப்பிக்க தகுதியுடைவர் ஆவர். இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.  யுஜிசி நெட் தேர்வு தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிவிப்பு அக்டோபர் மாதம் 15-ம் தேதி இணையதளத்தில் (www.cbsenet.nic.in) வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.