டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிதம்பரம் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
அரசு பள்ளி கல்வித் துறை
மாணவர்களுக்கு மழையால் ஏற்படும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு கஷாயம் பள்ளிகளில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மாலைக்கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் குமராட்சி கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஜான்சன், பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, ஆசிரியர்கள் ஜெயக்கொடி, அகிலா, மலர்விழி, லதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.