பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று துவக்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில், 243 கோடி ரூபாய் செலவில், 11ம் வகுப்பு படிக்கும், 2.70 லட்சம் மாணவர்கள்; 3.49 லட்சம் மாணவியர் என, மொத்தம், 6.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை துவக்கி வைக்கும் விதமாக, தலைமை செயலகத்தில், ஏழு மாணவர்களுக்கு, முதல்வர்
பன்னீர்செல்வம், இலவச சைக்கிள் வழங்கி வாழ்த்தினார்; தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட, பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.