ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்துவதால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நோய் தொற்று:
லோக்சபாவில் நேற்று, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர், பாகன் சிங் குலோஸ்தே கூறியதாவது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2015ல், அலைபேசி தொற்று தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளது; இதில், ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்துவதால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
81% வாய்ப்பு:
குறிப்பாக மருத்துவமனைகளில், ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்தும் போது, 81 சதவீதம் அளவிற்கு நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. எனவே, அலைபேசியை பயன்படுத்தும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.