WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 17, 2017

பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் தலைமையாசிரியர் வலியுறுத்தல்.

'தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளி நிர்வாக கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என்ற கருணாகரன் கமிட்டி பரிந்துரையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும்,' என கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் வலியுறுத்தினர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் பொன்முடி, பொருளாளர் சண்முகநாதன், கவுரவ ஆலோசகர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட தலைவர் அனந்தராமன் ஆகியோர் சென்னையில் உதயசந்திரனை சந்தித்தனர்.அப்போது, தமிழகத்தில் மேல்நிலை பள்ளிக்கான தனி இயக்குனரகம், டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு, மேல்நிலைப் பள்ளி நிர்வாகக் கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு பரிந்துரைகளை ஓய்வு பெற்ற கல்வி இயக்குனர் கருணாகரன் கமிட்டி அரசுக்கு அளித்துள்ளது. இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை பணியாளர்கள் சம்பளம் உயர்வு, பொதுத் தேர்வு விடைத் தாளின் முகப்பு தாள்களை தைக்கும் பணிக்காக ஒரு விடைத்தாளுக்கான ஊக்க ஊதியம் ரூ.2.50ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.