WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 17, 2017

அடுத்தாண்டு முதல் பிளஸ் 1க்கும் பொதுத்தேர்வு.

அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு போன்று, பிளஸ் 1ம் வகுப்புக்கும் அடுத்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டம் குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் புதிய புத்தகங்கள் வாங்கப்படும். யோகா உள்ளிட்ட திட்டங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிப்பிற்காக நூலகங்களுக்கு ரூ.2.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.