அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், வரும், 16ல் திறக்கப்படுகின்றன. சீனியர் மாணவர்கள், 'ராகிங்'கில் ஈடுபடுவதை தடுக்க, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜூன், 7ல் திறக்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து, நேற்று முதல், முழு வீச்சில் வகுப்புகள் துவங்கி உள்ளன. 'அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் வரும், 16ல் திறக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய மாணவியரை, பூக்கள் துாவியும், ரோஜா பூ கொடுத்து வரவேற்கவும், மகளிர் கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன. ஆண்கள் கல்லுாரியில் துவக்க நாளிலேயே, கல்லுாரி வளாகங்களில் ராகிங் மற்றும் பஸ் கலாட்டாக்களை தவிர்க்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.இதற்காக, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பேராசிரியர்கள், கல்லுாரி அதிகாரிகள் இடம் பெற்ற இந்த குழுவினர், வளாகங்களில், மாணவர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கவும், ராகிங் நடக்காமல் முன்னெச்சரிக்கை ரோந்து வரவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.