WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 24, 2017

அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க செட் அல்லது நெட் தேர்ச்சி அல்லது 2009 Regulations பி.எச்டி அவசியம் என உச்சநீதி மன்ற தீர்ப்பு வெளியீடு

அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணபிக்க  தற்போதைய UGC வழிகாட்டுதலின் படியும் 16.3.2015 ல் T.S.தாகூர்
மற்றும் R.F.நாரிமன் நீதியரசர்களின்  உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி செட் அல்லது நெட் அவசியம்.   ஆனால் 2009 Regulation படி மட்டும் பி.எச்டி முடித்தவர்களுக்கு செட் அல்லது நெட் கட்டாய தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியமானது எம்.எஸ்ஸி உடன் பி.எச்டி உள்ளவர்களுக்கு 9 மதிப்பெண்ணையும் எம்.எஸ்ஸி உடன் செட் அல்லது நெட் வைத்துள்ளவர்களுக்கு 5 மதிப்பெண்ணையும் வழங்குகிறது. அதாவது செட் நெட் உடையவர்கள் பி.எச்டி பட்டம் பெற்றவர்களை காட்டிலும் குறைவான கல்விதகுதி உடையவர்கள் என மதிப்பெண் வழங்கும் முறை மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் தெளிவு படுத்தியுள்ளதை தமிழக கல்வியாளர்கள் வன்மையாக கண்டிக்கின்றனர். மேலும் 2009 Regulation படி பி.எச்டி பட்டம் பெறாமல் குறிப்பிட்ட பல்கலை கழகங்களில் அந்த Regulations ஐ அமல்படுத்துவதற்கு முன் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் கட்டாயம் செட் அல்லது நெட் தேர்ச்சி அவசியம் என 16.3.2015 சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. K. செல்வராஜ் என்ற வழக்கறிஞர் RTI மூலம் பெறப்பட்ட தகவலின் படி  தமிழகத்தில் 2009 Regulation பி.எச்டி யை சென்னை பல்கலை கழகம் 1.7.2010 லும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 23.4.2013 லும் மனோன்மனியம் பல்கலைக்கழகம் 5.11.2009 லும் அழகப்பா பல்கலைக்கழகம் 3.11.2011லும் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஜீன் மாதம் 2009 லும் நடைமுறை படுத்தியுள்ளது.எனவே மேற்குறிப்பிட்ட தேதிக்கும் முன் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் மற்றும் 2009 Regulations நடைமுறை படுத்துவதற்கு  முந்தைய தேதியில் பி.எச்டி பட்டம் பெற பதிவு செய்தவர்கள் கட்டாய செட் நெட் அவசியம் என UGC யும் உச்சநீதி மன்றமும் எச்சரித்துள்ளது.ஆனால் தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள Teacher Recruitment board -ம் கடந்த முறை போல் உதவி பேராசிரியர் நியமனத்தை விதிகளை மற்றும் உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி தேர்வு செய்யும் முறை இல்லையெனில்  அரசு அதிகாரிகள்  உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சந்திக்க நேரிடும் என தமிழக கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.