WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 25, 2017

எம்.பி.பி.எஸ்., சேர்க்கை: தமிழகத்தில் எப்படி?

''தமிழக மருத்துவ கல்லுாரிகளில், தமிழகத்திற்கான, 85 சதவீத இடங்களில், 15 சதவீதம், சி.பி.எஸ்.இ., உட்பட மத்திய பாடத் திட்டங்களில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள்ள இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறினர்.அவர்கள் கூறியதாவது:
                                                                              

*தமிழக அரசு சார்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளுக்கு, இரண்டு வகை யான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அவை முறையே, அரசு மருத்துவ கல்லுாரிகள், அரசு பல் மருத்துவ கல்லுாரி, சுயநிதி மருத்துவ கல் லுாரிகள் மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல் லுாரி கள், அரசுக்கு ஒப்படைத்துள்ள இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.

* தமிழகத்தில் உள்ள, 22 அரசு மருத்துவ கல்லுா ரிகள் மற்றும் சிதம்பரத்தில் உள்ள, ராஜா முத் தையா மருத்துவ கல்லுாரியையும் சேர்த்து, மொத்தம், 3,050 இடங்கள் உள்ளன. அதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீதம், அதாவது, 456 இடங்கள் ஒதுக்கப்படும்

* மீதம், 2,594 இடங்கள் உள்ளன. தமிழக அரசின் 

சட்ட முன்வடிவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் தரா விட்டால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, 85 சதவீத இடங்கள், தமிழக மாணவர்களுக்குஒதுக்கப்படும்

* அதில், 15 சதவீதம், அதாவது, 391 இடங்கள், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., மற்றும் பிற பாடத்திட்ட மாணவர்களுக்கு, 'நீட்' மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கப்படும்

* மீதமுள்ள, 2,203 இடங்கள், மாநில பாடத்திட்டத் தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்

* மாநில அரசு ஒப்புதல் பெற்ற, 10 சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசுக்கு, 783 இடங்கள் ஒப்படைக் கப்படும். அதில், 85 சதவீதமான, 664 இடங்கள், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், மீதமுள்ள, 15 சதவீதமான, 119 இடங்கள், சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., மற்றும் பிற பாடத்திட்ட மாணவர் களுக்கும் ஒதுக்கப்படும்

* மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங் கள், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், ஜூன், 27 முதல், ஜூலை, 7 வரை வழங்கப்படும். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஜூலை, 8 கடைசி நாள்

* மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங் களுக்கு தீர்வு கூற, சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்தில், தகவல் மையம், இன்று துவக் கப்படும். மையம் துவக்கிய பின், தொடர்பு எண் அறிவிக்கப்படும்

* ஜூலை, 14ல், மருத்துவ மாணவர் சேர்க் கைக்கு, மாநில பாடத்திட்ட மாணவர்களின், தகுதி பட்டியல் வெளியிடப்படும்

* இட ஒதுக்கீட்டில், ஏற்கனவே உள்ள நடை முறை


பின்பற்றப்படும். அதன் முழு விபரம், விரைவில்அறிவிக்கப்படும்

* அகில இந்திய கவுன்சிலிங்கிற்கு விண்ணப் பிக்கும் மாணவர்கள், மாநில கவுன்சிலிங் கிற்கும் விண்ணப்பிக்கலாம்

* சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கும், மாநில மருத்துவ கல்வி இயக்குனரகமே, கவுன்சிலிங் நடத்தும்

* நிகர்நிலை பல்கலை மாணவர் சேர்க்கைக் கான கவுன்சிலிங், மத்திய சுகாதாரப் பணி இயக்குனரகம் மூலம் நடைபெறும்

* மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசா ணையை, அனைவரும் ஏற்றுக் கொள்வர். இதற்கு சட்ட பாதுகாப்பு வழங்க, உரிய நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பாடத் திட்ட மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டே, இம்முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.