தமிழகம் முழுவதும், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 1,777 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான, அரசின் ஒற்றைச்சாளர கவுன்சிலிங், சென்னை, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி மூலம் நடத்தப்படுகிறது. இதற்காக, பேராசிரியர் கலை செல்வனை, உறுப்பினர் செயலராக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி சார்பில், பி.எட்., விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது; வரும், 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகளிலும், திண்டுக்கல் லட்சுமி கல்லுாரி; சேலம் சாரதா கல்லுாரி; மதுரை தியாகராஜர் பர்செப்டார் கல்லுாரி; துாத்துக்குடி வி.ஓ.சி., கல்லுாரி; பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் மற்றும் திருவட்டாறு எஸ்.வி.கே.எஸ்.டி., கல்லுாரியில் விண்ணப்பங்களை பெறலாம். நேற்று மட்டும், ௧,௮௮௮ பேர் விண்ணப்பங்கள் பெற்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.