WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 23, 2017

அரசு கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அனுமதி.


அரசு கல்லுாரிகளில், கூடுதலாக, 20 சதவீதம் மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்து, விரைவில் உத்தரவு வழங்கப்படும்,'' என,
உயர்கல்வித் துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: அ.தி.மு.க., - நீதிபதி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில், பொறியியல் கல்லுாரி துவக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா? அமைச்சர் அன்பழகன்: அரசின் பரிசீலனையில் இல்லை. நீதிபதி: உசிலம்பட்டியில் பொறியியல் கல்லுாரி அல்லது கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க வேண்டும். அமைச்சர் அன்பழகன்: அரசு பரிசீலிக்கும். காங்., - ராமசாமி: காரைக்குடியில், அரசு கலை கல்லுாரி ஏற்படுத்த வேண்டும்; பெண்கள் கல்லுாரியும் வேண்டும். தற்போதுள்ள கல்லுாரியில் இடமில்லை எனக்கூறி, 61 மாணவர்களை புறக்கணித்து உள்ளனர். அமைச்சர் அன்பழகன்: அரசு கல்லுாரிகளில், 20 சதவீதம் கூடுதல் மாணவர்களை சேர்க்க, விரைவில் உத்தரவு வழங்கப்படும். அதே போல், சுயநிதி கல்லுாரிகளில், 10 சதவீதம்; அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 15 சதவீதம், கூடுதல் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.