தமிழகத்தில் அரசு கலைகல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களை கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தி
கௌரவ விரிவுரையாளர்களுக்கு யு.ஜி.சி அடிப்படை சம்பளத்தை 10 ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. செட் நெட் பி.எச்.டி மற்றும் 2009 எம்.பில் உடன் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.கௌரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்யும் எண்ணம் உள்ளதா என தமிழக உயர்கல்வி துறை அமைச்சரிடம் கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பியதற்கு அவ்வாறு திட்டம் ஏதுமில்லை என உயர்கல்விதுறை அமைச்சர் அவர்கள் கூறிய பதில் கௌரவ விரிவுரையாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.எனவே இந்த அரசு கௌரவ விரிவுரையாளர்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என தெரிகிறது.கௌரவ விரிவுரையாளருக்கு என இந்த அரசு எதுவும் செய்ய மறுப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது. எனவே அரசானது வரபோகும் அரசுகல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு அளிக்க கோரியும் , யு.ஜி.சி அடிப்படை சம்பளத்தை மற்ற மாநிலம் மோல் வழங்க கோரியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 22.6.17 முதல் அந்தந்த கல்லூரிகளிலேயே போராட்டம் நடத்த தமிழ்நாட்டில் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் ஜீலை 3,4,5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு சட்ட மன்ற வளாகத்தின் முன்பும் சென்னை DPI வளாகம் முன்பும் உண்ணாவிரத போராட்டம் நடத்த அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் திட்டமிட்டள்ளதாக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.