WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 2, 2017

ஜாக்டோ - ஜியோ அமைப்புடன் செப். 4ல் அரசு பேச்சு.

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் செப்.,4ல் அரசு பேச்சு நடத்த உள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, எட்டாவது ஊதிய மாற்றத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஜூலை 18ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் 
ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டையை நோக்கி ஆக., 5ல் பேரணி நடத்தினர். ஆக., 22 ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இன்னும் கோரிக்கைகள் நிறை வேற்றப்படாததால் செப்., 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து அரசு பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறுகையில், ''அரசு தரப்பில் செப்., 4 மதியம் 12:30 மணிக்கு, பேச்சு நடத்த வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், உதயகுமார் பங்கேற்கின்றனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.