WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 30, 2017

வினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்சம்.

அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட, பிளஸ் ௧ மாணவர்களுக்கு, இன்னும் வினா வங்கி வெளியிடாததால், அவர்கள், தேர்வுக்கு தயாராவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற, தமிழக பள்ளிக்கல்வித் துறையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், பிளஸ் ௧க்கு, பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பும், முக்கியமானது. முந்தைய ஆண்டுகளில், பிளஸ் 1க்கு, மாவட்ட அளவில் தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ஆண்டு முதல், பொதுத்தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், 10ம் வகுப்பில் பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள், இடைவெளி இன்றி அடுத்த ஆண்டிலும், பொதுத்தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது. எனவே, பிளஸ் 1 பொதுத்தேர்வு முதல் முறையாக அறிமுகம் ஆவதால், மாணவர்களுக்கு வழிகாட்ட வினா வங்கி வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி, ஆறு மாதங்களை தாண்டியும், இன்னும் வினா வங்கி வெளியிடவில்லை; அரையாண்டு தேர்வும் நெருங்கி விட்டது. அதனால், மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்துவது தாமதமாகிறது. சரியான வழிகாட்டல் இன்றி, பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியுமா என, மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை, வினா வங்கியை விரைந்து வெளியிட வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.