WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 5, 2017

9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கற்றல் முன்னறிவு தேர்வு : மெல்ல கற்போருக்கு சிறப்பு பயிற்சி.


அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் முன்னறிவு தேர்வு, இன்று நடக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, திறன் மிக்கவர்களாக
உருவாக்க, கல்வித் துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இதற்காக, 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், சிறப்பு பாட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், இன்று, கற்றல் முன் அறிவு தேர்வு நடத்தப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் இது செயல்படுத்தப்படுகிறது. கணிதம், அறிவியல், ஆங்கிலம் பாடங்களில் இத்தேர்வு நடைபெறும். இதற்கென சிறப்பு வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், 15 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்ற மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிக்குப் பின், மீண்டும் அடைவு தேர்வு நடத்தப்படும். இதன் மூலம், மெல்ல கற்கும் மாணவர்களை, பயிற்சிக்குப் பின், சக மாணவர்களுடன் இணைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். இத்தேர்விற்கான வினாத்தாள் கட்டுகள், நேற்று, தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கல்வி துறையின் இந்த நடவடிக்கையால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.