WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 29, 2017

நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில், 'ஆன்லைன்' வசதி.

பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், இலவச, 'இ - சேவை' வசதி செய்து தர, தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான உயர்கல்வி படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுதி, அதில், முன்னணியில் தேர்ச்சி பெற வேண்டும். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், அனைத்து மாணவர்களும், 'நீட்' நுழைவு தேர்வை கட்டாயம் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.சி.பி.டி., போன்ற தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க, மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இது போன்ற நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள், பின்தங்கி உள்ளதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான உயர்கல்வி படிப்புக்கு, நுழைவுத் தேர்வு அறிவிப்புகள் வெளிவர துவங்கி உள்ளன. முதற்கட்டமாக, ஜே.இ.இ., பிரதான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம், நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த தேர்வு களுக்கு, சி.பி.எஸ்.இ., யின் பிரத்யேக இணையதளங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வசதிகள் குறைவாக உள்ளன. மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்க சரியான வழிகாட்டுதலும் இல்லை. எனவே, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க, 'ஆன்லைன்' வசதி செய்து தர கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிகள் அல்லது போட்டி தேர்வு பயிற்சி மையங்களில், ஆன் லைன் பதிவு உதவி மையம் அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.