அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பணி மூப்பு, அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படும். அனுபவம் பெற்ற, தகுதியான தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.