WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 15, 2017

பிழையுடன் வினாத்தாள்; ஆசிரியர்கள், ’சஸ்பெண்ட்’.


ராஜஸ்தானில், எழுத்துப் பிழையுடன், 10ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்த, இரண்டு ஆசிரியர்கள், ’சஸ்பெண்ட்’
செய்யப்பட்டனர். ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு நடந்தது. இதில், பிரதமர் மோடி பற்றிய ஒரு கேள்வியில், ஏராளமான எழுத்துப் பிழைகள் இருந்தன. விசாரணையில், வினாத்தாள் தயாரித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் வினாத்தாள் அச்சடித்த அச்சகம் ஆகியவற்றின் கவனக்குறைவு காரணமாக, இந்த தவறு நடந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.