WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 13, 2017

அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல்.


அடுத்த ஆண்டு (2018) முதல் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) ஒரே மாதிரியான வினாத்தாள்
தயாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது. முன்னதாக, ஹிந்தி உள்ளிட்ட சில வடமொழிகளில் நீட் வினாத்தாள் எளிதாகவும், வங்கம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கடினமாகவும் வடிவமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஒரு தரப்பு மாணவர்களுக்கு சாதகமான நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாளை தயாரிக்க வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உத்தரவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, மோகன் சந்தானகெளடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, 'வரும் 2018-ஆம் ஆண்டு முதல் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று சிபிஎஸ்இ தரப்பில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஒரே மாதிரியான நீட் வினாத்தாள் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.