Sunday, January 7, 2018
'கூரியரில்' தபால் அனுப்ப உயர்கல்வி துறை தடை.
கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள், அரசு நிர்வாக தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்தக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக உயர்கல்வி செயலகத்தில் இருந்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், கூடுதல் செயலர், கோபால் பிறப்பித்துள்ள உத்தரவு:
அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள், தொழில்நுட்ப இயக்குனரகம், கல்லுாரி கல்வி இயக்குனரகம் உள்ளிட்ட அலுவலகங்களும், உயர்கல்வி துறை அலுவலகங்களும், தங்களின் நிர்வாக பணிகளில், தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்த கூடாது.
தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு, அரசின் விரைவு தபால் சேவையான, 'ஸ்பீட் போஸ்ட்'டில் இருப்பது போன்ற விதிகள் இல்லை. எனவே, பாதுகாப்பான முறைக்கு, விரைவு தபால் சேவைகளையே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.