WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 19, 2020

ஆசிரியர்களுக்கு விடுப்பு எடுக்க அனுமதி இல்லை: பள்ளிக் கல்வித்துறை.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களைத் தவிர பிற காரணங்களுக்காக விடுப்பு எடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பொது முடக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களுக்குச் சென்ற ஆசிரியர்கள் வரும் 21-ஆம் தேதிக்குள் தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், மருத்துவக் காரணங்களைத் தவிர பிற காரணங்களுக்காக விடுப்பு எடுக்கக் கூடாது என அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.