WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 7, 2020

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: விண்ணப்பிக்க இன்று கடைசி.


தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற விண்ணப்பிக்க சனிக்கிழமை கடைசி நாளாகும்.

கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். தமிழகத்தில்10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் 1.15 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான முதல்கட்ட மாணவா் சோ்க்கையில் 60 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டன.

எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த அக்.12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

இந்நிலையில், சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் சனிக்கிழமையுடன் (நவ.7) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்ட சோ்க்கைக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.