பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு, 15ம் தேதி மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகின்றன.
அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திகுறிப்பு:பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வை, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் எழுதிய மாணவர்களுக்கு, மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கான முடிவுகள், வரும், 15ம் தேதி வெளியாகின்றன.விண்ணப்பித்த தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், 15ம் தேதி பிற்பகல், 2:00 மணி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பெயர் மட்டும், பட்டியலில் இடம் பெறும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.