WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 21, 2020

வேதியியல் ஆசிரியர் பணி வரும் 30ம் தேதி கலந்தாய்வு.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு, வரும், 30ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடந்த, 2018 - 19ம் கல்வியாண்டில், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் முதுகலையாசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

அதில், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அவர்களுக்கு பணியிட ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு, 'எமிஸ்' இணையதளம் வழியே, வரும், 30ம் தேதி நடக்க உள்ளது.ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள தேர்வாளர்கள், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா என்பதை, முதலில் உறுதி செய்ய வேண்டும்.தங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு, முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டும்.

அவர்கள் நுழைவுச்சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களுடன், கலந்தாய்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சான்றிதழ்களை சரி பார்த்து, அனைத்தும் சரியாக இருந்தால் மட்டும், கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.