WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 5, 2020

5,000 பேராசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி.

நவீன தொழில்நுட்பம் குறித்து, கல்லுாரி பேராசிரியர்கள், 5,000 பேருக்கு, தகவல் தொழில்நுட்ப துறை சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழக உயர்கல்வி துறையில் இருந்து, அனைத்து இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தொழில் துறை வளர்ச்சியில், தகவல் தொழில்நுட்ப துறை முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு துறையினரும் தொழில்நுட்ப மாற்றங்களை தெரிந்து, அதை அமல்படுத்த வேண்டும். அந்த வகையில், மெஷின் லேர்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங், பிளாக் செயின், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற துறைகளில், அதிக ஆட்கள் தேவை.

எனவே, இந்த துறையில் மாணவர்களை அதிகமாக உருவாக்கும் வகையில், அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு, முதற்கட்டமாக கற்பித்தல் பணியில் உள்ள கல்லுாரி பேராசிரியர்கள், 5,000 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும். தமிழகம் முழுதும், கல்லுாரி வாரியாக இந்த பயிற்சியை நடத்த வேண்டும்.இதற்கு, தகவல் தொழில்நுட்ப துறை தேவையான வசதிகளை செய்து தரும். எனவே, இந்த பயிற்சியை பேராசிரியர்கள்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.