தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டு துவங்கியும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், சமீபகாலமாக கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சீராகி வந்ததால், ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

ஆனால், பிரிட்டனில் இருந்து புதிய வகை கொரோனா வைரசால், மீண்டும் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்படலாம். இந்த சூழலில் பள்ளிகளை திறப்பது சரியாக இருக்குமா? சுகாதாரத்துறை அனுமதி அளிக்குமா என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மீண்டும் ஊரடங்கு கடுமையானால், பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.