WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 20, 2025

மீண்டும் ஓராண்டு பி.எட்., எம்.எட்., படிப்புகள்; தமிழக மாணவர்கள் சேர முடியாது.

 கடந்த 2015ல், ஓராண்டு பி.எட்., எம்.எட்.,படிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில், அவற்றை அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அறிமுகம் செய்ய, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

நாட்டில், பி.எட்., - எம்.எட்., படிப்புகளை முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், அவற்றின் தரம் குறைந்ததாலும், 2015ம் ஆண்டுக்கு பிறகு, அப்படிப்புகள் நிறுத்தப்பட்டன.

அவற்றுக்க பதிலாக, ஈராண்டு படிப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மீண்டும் ஓராண்டு பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படிப்புகளை அறிமுகம் செய்ய, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலான என்.சி.டி.இ., திட்டமிட்டுள்ளது.

அதன்படி, வரும் கல்வியாண்டு முதல், இப்படிப்பு அறிமுகமாக உள்ளது.

இதில், நான்காண்டு பட்டப்படிப்பு அல்லது முதுகலை படிப்பை முடித்தோர், ஓராண்டு, பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், முழுநேரமாக எம்.எட்., படிக்க விரும்புவோர் ஒராண்டு படிப்பில் சேரலாம்.

அதேநேரம், புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்காத, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் மாணவர்கள், மூன்றாண்டு பட்டப்படிப்பை மட்டுமே முடித்துள்ளனர்.

அதனால், அவர்கள் வழக்கம் போல, இரண்டாண்டு பி.எட்., படிப்பில் மட்டுமே சேர முடியும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.