WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 20, 2025

புதிய கல்விக்கொள்கை தமிழகத்துக்கு அவசியம்: வரவேற்கும் மக்கள்

 மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதியக் கல்விக்கொள்கை தொடர்பாக மக்கள் தங்களது கருத்தை தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2020ல், மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. மத்திய அரசின், 'சமக்ர சிக்ஷா அபியான்' எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்தக்கு தர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கவில்லை. 'மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்து, தமிழக அரசு கையெழுத்திட்டால் மட்டுமே, நிதி ஒதுக்க முடியும்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால், அது தேசிய கல்வி கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும். அதில் இணைவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.

ந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வரும் சூழலில், நம் கோவை மக்கள் சிலரிடம் இதுகுறித்து கேட்டோம்.

அதற்கு அவர்கள் அளித்த பதில்:

தேவையில்லை


புதிய கல்வி கொள்கை என்பது, கல்வியை வியாபாரமாக்கும் முயற்சி. இதன் வழியாக ஹிந்தியை மத்திய அரசு தமிழகத்துக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. கல்வியில் வளர்ச்சி அடைந்த தமிழகத்துக்கு, மும்மொழி தேவையில்லை.

கலை அஷ்வினி

சமூக ஆர்வலர்

அவசியம்


ஹிந்தி வேண்டாம் என்பது எல்லாம் பழைய கதை. அதெல்லாம் இனி தமிழ கத்தில் எடுபடாது. மும்மொழி கல்வி திட்டத்தில், பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதை அவசியம் குழந்தைகள் படிக்க வேண்டும்.

கலை அஷ்வினி

சமூக ஆர்வலர்

அவசியம்


ஹிந்தி வேண்டாம் என்பது எல்லாம் பழைய கதை. அதெல்லாம் இனி தமிழ கத்தில் எடுபடாது. மும்மொழி கல்வி திட்டத்தில், பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதை அவசியம் குழந்தைகள் படிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.