தேர்வு என்றாலே எங்களுக்குப் பய மாக இருக்கிறது என்று பலர் சொல் வீர்கள். அல்லது நீங்களே குழப் பிக்கொள்வீர்கள். ஆனால் எல்லா பிரச் சினைகளுக்கும் ஒரே தீர்வு - முறையான கல்வியைப் பெறுதல் என்று சுவாமி விவேகானந்தர் கூறுவார். படிப்பதிலேயே உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்றால் அதைத் தீர்ப்பதற்கு கல்விதான் ஒரு சரியான வழிமுறையாக அமையும்.
படித்தது மறந்துவிடுகிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒரு சினிமாப் பாடலை ஒரு முறை கேட்டாலே உங்களுக்கு அதை முணுமுணுக்கத் தோன்றுகிறது அல்லவா! உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் எத்தனை ரன்கள் குவித்தார், எத்தனை சிக்ஸர் அடித்தார் போன்ற தகவல்களை ஒரு முறை கேட்டதும் பலமுறை நினைவுப்படுத்திக் கொள்கிறீர்கள், இதனால் அந்த ஸ்கோர் உங்களுக்கு அத்துபடி ஆகிறது.
1. படிப்பில் கவனம் வைத்தல்: படிப்பில் கவனம் வருவதற்கு, நிறைய படிப் பவர்களைக் கவனியுங்கள். படிக்கத் தொடங்கும் முன்பு, “இப்போது நான் படிப்பதன் மூலம், வாழ்க்கையில் முன்னேறப் போகிறேன். என் முன்னேற்றத்துக்கு இது ஓர் அடித்தளமாக இருக்கப் போகிறது” என்று உங்கள் மனதுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளுங்கள்.
2. படித்ததைத் திரட்டுதல்: டி.வி. அறையிலிருந்து தள்ளி அமருங்கள். செல்போனை எடுத்தால்கூட பாடங்களை மட்டுமே படிப்பேன் என்று உங்களுக்கு நீங்களே கட்டளையிட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய பள்ளியில், யாரெல்லாம் நன்றாகப் படிக்கிறார்களோ அவர்களை மனதில் கொண்டு வாருங்கள். அவர்களைப் போன்று நானும் படிப்பேன் என்று நினைத்துப் பாருங்கள்.
ஆசிரியரிடம் கற்று, நீங்கள் புரிந்துகொண் டதை, இன்னொருவருக்கு சொல்லும்போது நீங்கள் எப்படிச் சொல்வீர்கள்? அந்தத் திறமை உங்களுக்குள் வர வேண்டும். இதை நன்றாகச் செய்து பாருங்கள் நீங்களே ஒரு மாணவராகவும் ஆசிரியராகவும் வளர்வீர்கள். பாடங்களைப் புரிந்துகொண்டு படிக்கும் திறமை, அதில் உள்ள சுவை உங்களுக்கு வாய்த்துவிட்டால் படிப்பது பெரும் உற்சாகத்தைத் தரும்.
3. படித்ததை நினைவு கூர்தல்: உங்கள் அம்மா சமைப்பதைப் பார்த்திருப்பீர்கள். காய்கறிகளை நறுக்கிப் பாத்திரத்தில் வேக வைக்கும்போது அவ்வப்போது அம்மா அதைக் கிளறிக் கொடுப்பார். அதுபோல் நீங்கள் நன்றாகப் படித்த பாடங்களை அடிக்கடி உங்கள் மனதில் கொண்டு வாருங்கள். அப்படிக் கொண்டு வருவதன் மூலம் அதனை நீங்கள் உள்வாங்குகிறீர்கள். பாடங்களை வாய்விட்டுப் படியுங்கள். பலமுறை எழுதிப் பாருங்கள். இந்த இரண்டு பயிற்சிகளும் மறதியை விரட்டிவிடும். எழுதிப் பார்த்தால் எழுதும் திறனும் மேம்படும்.
4. படித்ததை மனதில் தேக்கிவைத்தல்: மனதில் அடிக்கடி பாடங்களை நினைவுகூர் வதன் மூலம், உங்கள் மனதில் அந்தப் பாடங் கள் ஓர் ஆழமான இடத்தைப் பிடிக்கும். உங்கள் மனதின் சக்தி, அதன் நினைவாற்றல் உங்களுக்குத் தெரியுமா? யாராவது உங்களைத் திட்டிவிட்டால் எத்தனை ஆண்டுகளானாலும் அதை நீங்கள் மறப்பதில்லை. அந்தச் சாதாரணப் பண்பை ஏன் உங்கள் மேம்பாட்டுக்காக நீங்கள் பயன்படுத்தக் கூடாது? சுவாமி விவேகானந்தர் ஒன்றை ஒரு முறை படித்தால் போதும், ஆயுள் உள்ளவரை அதை மறக்கவே மாட்டார். அதற்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்.
5. திறமைகளை வெளிப்படுத்துதல்: ஒரு பிரசன்டேஷன் கொடுக்கும்போது எப்படி நீங்கள் உங்களைத் தயார்படுத்திக் கொண்டு செய்வீர்களோ, அப்படி தேர்வு சமயத்தில் செய்ய வேண்டும். பலர் சிரமப்பட்டுப் படிக்கிறார்கள். ஆனால் தேர்வில் கேள்விகளைச் சற்று மாற்றிக் கேட்டாலே போதும், தடுமாறி விடுகிறார்கள். சிந்தித்து, புரிந்துகொண்டு படிப்பவர்கள் இந்தப் பிரச்சினையை சர்வ சாதாரணமாக சமாளிப்பார்கள். கடைசியாக இதை நினைவில் கொள்ளுங்கள். தேர்வுக்கு முன்பு உங்களது உடல் தகுதி, மனதின் தெளிவு, புத்தியின் வேகம் ஆகிய மூன்றும் முக்கியம். உடலுக்குக் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்பாக இருங்கள், சோர்வு வந்து விடக் கூடாது.
இப்போது மேற்கூறிய ஐந்து நிலைகளிலும் கவனம், ஆர்வம், பொறுப்பு, செயல்திறன் ஆகியவற்றுடன் ஒருவர் ஈடுபடும் போது மதிப்பெண்கள் அவர் பின்னால் வரும். மறதி இருக்காது, நினைவாற்றல் தகதக வென ஜொலிக்கும். அறிவு அவர்களது வசமாகும். புகழ் அவர்களுக்கு சேவை செய்யக் காத்திருக்கும். அப்படிப்பட்ட சாதனை மாணவர் களாக நீங்கள் ஒவ்வொருவரும் வர வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.
- சுவாமி விமூர்த்தானந்தர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.