WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 21, 2025

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர்கள் ஆக.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 

தமிழக அரசின் டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்​கள் ஆக. 3-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. மறைந்த குடியரசுத் தலை​வர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ம் தேதி ஆண்டு​தோறும் ஆசிரியர் தின​மாக கொண்​டாடப்​படு​கிறது. இந்​நாளில் சிறந்த ஆசிரியர்​களை தேர்வு செய்து ‘டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்​படுத்தி வரு​கிறது.

இந்த விருது பெறு​பவர்​களுக்கு ரூ.10,000 ரொக்​கம், வெள்​ளிப் பதக்​கம் மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கப்​படும். அதன்​படி நடப்​பாண்டு மாநில நல்​லாசிரியர் விருதுக்கு தகு​தி​யானவர்​களை தேர்வு செய்​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பள்ளிக்கல்​வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன் வெளி​யிட்​டுள்​ளார்.

அதன்​விவரம் வரு​மாறு: நடப்​பாண்டு (2025-26) 342 அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்​கள், மாவட்​டத்​துக்கு ஒரு​வர் வீதம் 38 தனி​யார் பள்ளி ஆசிரியர்​கள், ஆங்​கிலோ இந்​திய பள்​ளி​கள், சமூக பாது​காப்​புத்​துறை பள்​ளி​கள், மாற்​றுத்​திற​னாளி ஆசிரியர்​களில் தலா 2 பேர் என மொத்​தம் 386 பேருக்கு விருதுகள் வழங்​கப்பட உள்​ளன. இந்த விருதுக்கு விருப்​ப​முள்ள ஆசிரியர்கள் எமிஸ் தளம் வழி​யாக ஆக. 3-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்​.

அ​திலிருந்து தகு​தி​யானவர்​களை தேர்வு செய்ய முதன்​மைக் கல்வி அலு​வலர் தலை​மை​யில் 6 பேர் கொண்ட மாவட்ட தேர்​வுக்​குழு அமைக்​கப்பட வேண்​டும்.

இதையடுத்து விண்​ணப்​பித்த ஆசிரியர்​கள் மாவட்​டத் தேர்​வுக்​குழு​வின் முன் நேர்​காணலுக்கு வரவழைக்​கப்​பட்டு மதிப்​பீடு செய்​யப்​படு​வர். அதன்​பின் மாவட்ட தேர்​வுக் குழு​வினர் தகு​தி​யான ஆசிரியர்​களின் பட்​டியலை பள்ளிக்​கல்வி இயக்​குநர் தலை​மையி​லான மாநில தேர்​வுக்​குழு​வின் பரிசீலனைக்கு ஆக. 14-ம் தேதிக்​குள் அனுப்ப வேண்​டும்.

அவற்றை ஆராய்ந்து மாநில தேர்​வுக்​குழு இறு​திப்​பட்​டியலை தயாரிக்க வேண்​டும். விருதுக்கு விண்​ணப்​பிக்​கும் ஆசிரியர்​கள் குறைந்​தது 5 ஆண்​டு​கள் பணி அனுபவம் பெற்​றிருப்​பதுடன், எவ்​வித குற்​றச்​சாட்​டுக்​கும், ஒழுங்கு நடவடிக்​கைக்​கும் உட்படாதவராக இருக்க வேண்​டும். இதுத​விர அரசி​யல் கட்​சிகளு​டன் தொடர்​புடைய​வர்​கள் மற்​றும் தேசிய விருது பெற்றவர்களின் பெயர்​களை பரிந்​துரைக்க​கூ​டாது.

அதே​போல், வகுப்​பறை​யில் கற்​பித்​தல் பணி​யில் ஈடு​படும் ஆசிரியர்​களுக்கு மட்​டுமே விருது வழங்​கப்​படும். அலு​வல் பணி​களை மேற்​கொள்​ளும் ஆசிரியர்​கள் விண்​ணப்​பிக்​கக்​கூ​டாது. பள்ளி மாணவர்​களின் இடைநிற்​றலைக் குறைத்​தல் போன்ற பணி​களில் ஈடு​பாடு கொண்​ட​வ​ராக இருக்க வேண்​டும் என்பன உள்ளிட்ட வழி​காட்​டு​தல்​கள்​ அதில்​ இடம்​ பெற்​றுள்​ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.