WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 2, 2025

ஏப்ரல், ஜூன் மாத ஊதியம் வழங்காததால் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் தவிப்பு.

 



நிதித்துறை ஒப்புதல் அளித்தும், கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் உயர் கல்வித் துறை காலம் தாழ்த்துவதால் 7,360 கவுரவ விரிவுரையாளர்களின் குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளன.



தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் 2-ம் சுழற்சியில் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் தொகுப்பூதியம் வழங்க அந்தந்த கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர் களின் விவரத்தை கடந்த மே 25-க்குள் அனுப்பி வைக்குமாறு கல்லூரிக் கல்வி ஆணையர், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு மே 15 அன்று சுற்றறிக்கை விடுத்தார்.

அதன்படி, கவுரவ விரிவுரையாளர்களின் விவரம் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 7-ம் தேதி முதல் சுழற்சிக்கு 5,699 பேருக்கு மே மாதம் தவிர்த்து 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்க ரூ.156.72 கோடியும், மே 13-ம் தேதி 2-ம் சுழற்சிக்கு 1,661 பேருக்கு ரூ.45.67 கோடியும் கோரி கல்லூரிக் கல்வி ஆணையர் நிதித் துறைக்கு கடிதம் அனுப்பினார். அதற்கான ஒப்புதலை நிதித்துறை முதல் சுழற்சிக்கு மே 30 அன்றும், 2-ம் கழற்சிக்கு ஜுன் 7 அன்றும் வழங்கியது.

அதனையடுத்து ஜூன் 2-ல் முதல் கழற்சியிலும், ஜூன் 9-ல் 2-ம் சுழற்சியிலும் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண்.129 மற்றும் 140-ல் அவர்களுக்கான சம்பள ஒதுக்கீடும் குறிப்பிடப் பட்டுள்ளது. நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதமாகியும், கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் உயர் கல்வித் துறை காலம் தாழ்த்தி வருகிறது.



இதனால் ஏப்ரல் , ஜூன் மாத ஊதியம் பெற முடியாமல் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் தவிக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. எனவே போர்க்கால அடிப்படையில் ஊதியத்தை வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுரவ விரிவுரையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.