WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 1, 2025

மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமல்.

 

 ​மாணவர்​கள் தண்​ணீர் பருகுவதை ஊக்​குவிக்​கும் வகை​யில் பள்​ளி​களில் ‘வாட்​டர் பெல்’ திட்​டம் நேற்று அமல்​படுத் தப்பட்​டது. மாணவர்​களின் உடல்​நலனை காக்க தமிழக பள்​ளிக் கல்​வித்​துறை பல்​வேறு முன்​னெடுப்​பு​களை மேற்​கொண்டு வருகிறது. வகுப்பு நேரத்​தில் மாணவர்​கள் தண்​ணீர் பரு​காமல் இருப்​ப​தால் பல்​வேறு உடல் உபாதைகள் ஏற்​படு​கின்​றன.

அதை தடுக்​கும் வகை​யில் மாணவர்​கள் தண்​ணீர் பரு​கு​வதை ஊக்​குவிக்க, ‘வாட்​டர் பெல்’ எனும் புதிய திட்​டத்தை தற்​போது செயல்​பாட்​டுக்கு கொண்டு வந்​திருக்​கிறது. இந்த திட்​டம் அனைத்து பள்​ளி​களி​லும் நேற்று முதல் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

மாணவர்​கள் தண்​ணீர் பருக ஏது​வாக காலை 11 மணிக்​கும், பகல் 1 மணிக்​கும் மற்​றும் மாலை 3 மணிக்​கும் வாட்​டர் பெல் அடிக்​கப்​பட்​டது. பெல் அடித்​ததும் தண்​ணீர் பரு​கு​வதற்​காக 2 நிமிடங்​கள் இடைவெளி அளிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்துமாணவர்​கள் வாட்டர் பாட்​டில்​களில் இருந்து தண்​ணீர் பரு​கினர். மாணவர்​கள் தண்​ணீர் பரு​கு​வதை தலைமை ஆசிரியர்​கள் கண்​காணித்​தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.