காலாண்டு தேர்வு நடக்கும்போது ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செப்., 15 முதல் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு துவங்கியுள்ளது. அதேநேரம் எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில் அரசு, உதவி பெறும் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னை, திருச்சி, சேலம், நீலகிரி, மதுரை ஆகிய இடங்களில் பாடம்வாரியாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பாடம் வாரியாக நான்கு சுற்றுகளாக ஆசிரியர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இப்பயிற்சி துவங்கியுள்ளது. பிற மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் பங்கேற்றனர். இதனால் தேர்வுப் பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் பலருக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களாக பயிற்சி நடக்கிறது. மாணவர்கள் நலன் கருதி காலாண்டு தேர்வின் போது அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய நிலையில், இதுபோன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆசிரியர்களை அழைப்பது வினோதமாக உள்ளது.
இப்பயிற்சியை காலாண்டு தேர்வு முடிந்து, அக்டோபரில் நடத்தலாம். ஆசிரியைகள் நலன் கருதி பயிற்சி நடக்கும் இடங்களை மாவட்டம் வாரியாக தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வி செயலாளர், இயக்குநர் ஆகியோரிடம் கடிதம் அளித்து வலியுறுத்தியுள்ளோம். பயிற்சியை தள்ளி வைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.