WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 9, 2025

சிடெட் தேர்வுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும்.

 



மத்​திய அரசின் இலவச கட்​டாய கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, ஆசிரியர் பணி​யில் சேர்​வதற்​கு, மத்​திய ஆசிரியர் தகுதி தேர்​வில் (சிடெட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும்.



இரண்டு தாள்​கள் கொண்ட இத்தேர்வை மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) ஆண்​டு​தோறும் ஜூலை, டிசம்​பர் மாதங்​களில் நடத்தி வரு​கிறது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்​வும், பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்​வும் நடத்​தப்​படு​கிறது.

இந்​நிலை​யில், அடுத்த தேர்வு டிசம்​பர் முதல் வாரத்​தில் நடத்​தப்பட உள்​ளது. அதற்​கான அறி​விப்​பாணை ஓரிரு நாளில் வெளி​யாகும் என்று தெரி​கிறது. விருப்​பம் உள்ள பட்​ட​தா​ரி​கள் https://ctet.nic.in என்ற இணை​யதளம் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும்

மொத்​தம் 150 மதிப்​பெண்​களுக்கு தமிழ் உட்பட 20 மொழிகளில் நேரடி முறை​யில் தேர்வு நடை​பெறும். தேர்வு கட்​ட​ணம், பாடத்​திட்​டம் உள்​ளிட்ட விவரங்​கள் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​படும் என்று சிபிஎஸ்இ அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.