WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 5, 2026

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்.

 

அரை​யாண்டு விடு​முறை முடிந்து பள்​ளி​கள் இன்று (ஜன.5) திறக்​கப்பட உள்​ளன. இதற்​கான முன்​னேற்​பாட்டு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தைப் பின்​பற்​றும் அனைத்து வித​மான பள்​ளி​களி​லும் அரை​யாண்டு மற்​றும் 2-ம் பரு​வத்​தேர்வு டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடை​பெற்​றது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி முதல் மாணவர்​களுக்கு அரை​யாண்டு விடு​முறை வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் பள்​ளி​கள் மீண்​டும் இன்று (ஜன.5) திறக்​கப்​பட்டு வகுப்​பு​கள் வழக்​கம்​போல் நடை​பெறவுள்​ளன.

இதையடுத்து பள்ளி திறப்​புக்​கான வளாக தூய்​மைப் பணி​கள் உள்​ளிட்ட முன்​னேற்​பாடு​கள் தற்​போது தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. பள்​ளி​கள் திறக்​கப்​பட்ட முதல் நாளி​லேயே மாணவர்​களுக்கு 3-ம் பரு​வத்​துக்​கான பாடநூல்​களை வழங்க வேண்​டும். அதே​போல், திருத்​தப்​பட்ட அரை​யாண்​டுத் தேர்வு விடைத்​தாள்​களை​யும் மாணவர்​களுக்குத் தரவேண்​டும்.

மேலும், மாணவர்​கள் பின்​தங்​கிய பாடங்​களில் கவனம் செலுத்​தி, அவர்​களின் தேர்ச்​சியை மேம்​படுத்த பாட ஆசிரியர்​கள் தகுந்த நடவடிக்கை வேண்​டும். நடத்​தப்​ப​டாத பாடங்​களை துரித​மாக நடத்தி முடிக்க வேண்​டும் என்று ஆசிரியர்​களுக்கு பள்​ளிக் கல்​வித்​துறை சார்​பில் அறி​வுறுத்​தல்​கள்​ வழங்​கப்​பட்​டுள்​ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.