2026ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு 81 சதவிகித பொறியியல் மாணவர்கள் இடங்கள் நிரப்பப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு நடந்து முடிந்த இரண்டு சுற்று பொறியியல் கலந்தாய்வில் இதுவரை வெறும் 41 சதவிகித இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
அதாவது, 1,81,436 மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னமும் 1,06,778 இடங்கள் இறுதிச் சுற்றுக் கலந்தாய்வுக்காக காலியாக உள்ளன.
இரண்டாவது சுற்றில் 93 ஆயிரம் பேர் பங்கேற்றும், வெறும் 49 ஆயிரம் பேர் தான் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இறுதிச் சுற்று நிறைவடைந்த பிறகும் கிட்டத்தட்ட 45 ஆயிரம் இருக்கைகள் காலியாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 35 ஆயிரமாக இருந்தது.
மாணவர்கள் பெரும்பாலும் நகரப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளையே விரும்புவது ஒரு காரணமாக இருக்கலாம். இதனால், நகரப் பகுதிகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை கிடைக்காது என நினைக்கும் மாணவர்கள் நிர்வாகப் பிரிவில் சேர்க்கை பெறுவது அதிகரித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.