‘கடந்த 2017-23 காலகட்டத்தில் 31,510 எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு காலதாமதமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது’ என இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி, எஸ்சி-மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் தொடர்பாக, இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வியறிவு விகிதத்தையும் கல்வித்தரத்தையும் உயர்த்தும் நோக்கில் அவர்களுக்கு மத்திய-மாநில அரசு சார்பில் பல்வேறு கல்வி உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் 2019-20 காலகட்டத்தில் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான ப்ரீ-மெட்ரிக், போஸ்ட்-மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்கள் சராசரியாக 46 சதவீதம் மற்றும் 39 சதவீத பள்ளிகளைச் சென்றடையவில்லை.
கடந்த 2017-23 காலகட்டத்தில் குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் 36,510 எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.7.28 கோடி கல்வி உதவித்தொகை ஒரு மாதம் முதல் ஓராண்டு வரை காலதாமதமாக வழங்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் வங்கிக்கணக்கு முடக்கம், பரிவர்த்தனை நிறுத்தம், வங்கிக்கணக்கு இல்லை போன்ற காரணங்களால் 3,530 பேருக்கு ரூ.161 கோடி கல்வி உதவித்தொகை வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல், 2023-25-ம் ஆண்டுகளில் மத்திய கல்வி உதவித்தொகை பெற தகுதியில்லாத எஸ்சி மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர்கள் 2,576 பேருக்கு மத்திய அரசின்பங்கான 60 சதவீத உதவித்தொகை வழங்கப்பட்டதால் ரூ.3.64 கோடி தவறாக செலுத்த நேரிட்டது.
தணிக்கை குழு பரிந்துரைகள்
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அனுமதிக்கும் முன், கல்வி நிறுவனங்களில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.
தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அவர்களின் விண்ணப்பங்களை அரசு ஆராய வேண்டும். கல்வி உதவித்தொகை அந்தந்த கல்வி ஆண்டிலேயே வழங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.