தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
பொதுப்பணித் துறையில் சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் பிரிவில் உதவி பொறியாளர்கள், தொழிற்சாலைகள் பாதுகாப்பு உதவி இயக்குநர் உள்பட மொத்தம் 98 உதவிப் பொறியாளர் அளவிலான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இந்தத் தேர்வில் பங்கேற்க 54,690 பேர் விண்ணப்பித்தனர். இதில் 1,135 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 53,555 பேருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.
இவர்களில் 31 ஆயிரத்து 631 பேர் (60 சதவீதம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில் பங்கேற்றதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.