சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில், 50 விரிவுரையாளர்களை நியமனம்
செய்வதற்காக, செப்டம்பர், 21ம் தேதி, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), போட்டி தேர்வை நடத்துகிறது.
இது குறித்த அறிவிப்பை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. ஆகஸ்ட், 11ம் தேதி முதல், 26ம் தேதி வரை, ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
போட்டி தேர்வு, சென்னையில் மட்டுமே நடக்கும் எனவும், தேர்வில், விண்ணப்பத்தாரர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு, இருவர் வீதம், நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர் எனவும், டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரி, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.