டிஎன்பிஎஸ்சி குரூப்-1 எழுத்துத் தேர்வு பயிற்சிக்கு ஆன்-லைனில்
விண்ணப்பிக்கலாம் என மனித நேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வில் பங்குபெற வுள்ளவர்களுக்கான எழுத்துத் தேர்வு பயிற்சி ஆக. 8 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படும். அதற்கு www.saidais.com என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஏற்கெனவே குரூப்-1 முதன்மை தேர்வு எழுதி வாய்ப்பிழந்தவர்களுக்கும், நேர்முகத் தேர்வு வரை சென்று வாய்ப்பிழந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.