WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 8, 2014

உதவி பேராசிரியர் பணி : நேர்முகத் தேர்வு ஆரம்பம்

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்
நியமனத்திற்கான நேர்முக தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், இன்று துவங்குகிறது.

அரசு கல்லூரிகளில், 1,063 உதவி பேராசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததை அடுத்து, நேர்முக தேர்வு, இன்று, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் துவங்குகிறது.

இன்று, மாற்றுத்திறனாளிகள் அழைக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், 'நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம், தனித்தனியே, அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. நேர்முக தேர்வு நடக்கும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரம், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்' என, தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.