தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த
மாணவ, மாணவியருக்கு பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் தேசியத் தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின் செய்திக் குறிப்பு:
டிசம்பர் 2014-ல் நடைபெறும் சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேசியத் தகுதி தேர்வுக்கான இப்பயிற்சி வகுப்புகள் 23-ம் தேதி தொடங்குகின்றன. ஆங்கிலம், வணிகவியல், கணிதம், ரசாயனம் மற்றும் உயிரி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளில் சேர ரூ.500 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
இப்பதிவு 20-ம் தேதி செய்ய வேண்டும். எஸ்சி., எஸ்டி மாணவ, மாணவியர் முதுகலையில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற வகுப்பினர் முதுகலையில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுகலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 0416-2241744 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.