சென்னை, செப்.29– ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி
ஆசிரியர்கள் 20,500 பேர் கடந்த வியாழக்கிழமை பணியில் நியமிக்கப்பட்டனர். பணி நியமனத்திற்கு எதிரான இடைக்கால தடை விலக்கப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் நியமனத்தை பள்ளி கல்வித்துறை முடித்தது. அந்தந்த மாவட்ட கல்வி முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் ஆன்லைன் மூலமாக காலி இடங்களில் பணி அமர்த்தப்பட்டனர். நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் மறுநாளே பணியில் சேர்ந்தனர். பணியில் சேர்ந்த மறுநாள் முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அக்டோபர் 6–ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. புதியதாக நியமிக்கப்பட்ட 10,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று (30–ந்தேதி) மற்றும் 1–ந்தேதி ஆகிய 2 நாட்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. புதிய ஆசிரியர்கள், மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும், 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கிரேடு முறைப்பற்றியும் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்றுதல் வேண்டும் என்று இதில் அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல புதிதாக நியமிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ்–2 மாணவர்களுக்கு எளிதில் புரியக்கூடிய வகையில் பாடம் நடத்தவும், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் இந்த பயிற்சியின்போது எடுத்துரைக்கப்படும். இதுபற்றிய சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ளார்.Tuesday, September 30, 2014
1 comment:
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.
Subscribe to:
Post Comments (Atom)
Madam pls contact : jollykannan@yahoo.co.in. They will give the joining idea
ReplyDeleteThose who want to file the case in supreme court about GO 71& 25 (near madurai). Pls contact jollykannan@yahoo.co.in