இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் தில்லி தலைமை அலுவலகம் மற்றும்
ஆராய்ச்சி கிளைகளில் காலியாக உள்ள 268 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேளாண் அறிவியல் தேர்வு வாரியம்.
மொத்த காலியிடங்கள்: 268
கிளைகள் வாரியான காலியிடங்கள் விவரம்:
தில்லி தலைமை அலுவலகத்தில் - 46
ஆராய்ச்சி கிளை நிறுவனங்களில் - 222
பணி: தில்லி தலைமை அலுவலகத்தில் உதவியாளர்
காலியிடங்கள்: 46
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
பணி: விவசாய ஆராய்ச்சி கவுன்சில் கிளைகளில் உதவியாளர் காலியிடங்கள்: 222
வயது: 01.08.2014 தேதியின் படி 20 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000.
இதனை நெட் பேங்கிங் அல்லது சிண்டிகேட் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் இதற்காக வழங்கப்படும் செலானை பயன்படுத்தி செலுத்தலாம். பெண்கள், எஸ்சி., எஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதான தேர்வு நடத்தப்படும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2014. மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் http://www.asrb.org.in அல்லது http://www.icar.org.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.