மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் “வெயிட்டேஜ்” என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த “வெயிட்டேஜ்” மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் பெரும்பாலோர் வெற்றிபெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும் அறிவர்.
அதனால்தான் இந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சமூகத்தின் மதிப்புமிக்க பணிகளை ஆற்றிவரும் ஆசிரியர் சமூகத்தின் பிரச்சினைகளை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இனியும் தாமதிக்காமல், ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, சுமுகமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.