WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 6, 2014

தனியார் ஐ.டி.ஐ.க்கள் நாளை இயங்காது: சங்கத்தின் அறிவிப்பு !!

தமிழ்நாடு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பள்ளிகளின் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக எடுக்கப் பட்ட முடிவின்படி, நாளை தனியார் ஐ.டி.ஐ.க்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 மே மாதத்தில் விதி 110ன் கீழ் தமிழகத்தின் அனைத்து தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு முறை சேர்க்கை மூலம் 50% அரசு ஒதுக்கீடு இடங்களில் மாணவர்களை தொழிற்பயிற்சிக்கு சேர்க்கை செய்து அவர்களின் முழு பயிற்சி கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

தமிழகத்தில் முடங்கிப் போகும் நிலையில் இருந்த தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் தற்போது புத்துயிர் பெற்று வருகின்றன. இதற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். தற்போது அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அக்.7., நாளை அனைத்து தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பள்ளிகள் இயங்காது என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.